சனி, 23 ஜனவரி, 2016

17 ந் தேதி நடந்த விசயம்

17 ந் தேதி நடந்த விசயம் 

இன்னா ஆச்சு உங்களுக்கு, இன்னும் நாலு நாள் லே நாப்பத்தி எட்டு வருஷம் ஆவப்போவுது நம்ம கலியாணம் ஆகி, ......
இறைந்து சொன்னாள் இவள்.

(கொ ஞ்சம் விட்டு விட்டு....மெதுவாக)

இன்னும் எத்தனை வருஷம் தான் இந்த மனுஷனுக்கு புத்தி சொல்லனும்னு தெரியல்லையே மாந்துரையானே !! என்று

முணுமுணுத்தாள் .

காலு...காலு....இடுப்பு, எலும்பு , துடை எலும்பு என்று முனகினேன்.

நான் வேதனைப்படுவதைப் பார்த்து பரிதாபம் கொண்டு என் பக்கத்தில் வந்த என் பிரிய சகி ,

எதுக்காவ அலைஞ்சு திரிஞ்சிட்டு வேதனையை விலை குடுத்து வாங்கிகினு இருக்கீக...   இப்ப தான் பத்து நாள் முன்னாடி பத்து நிமிசத்திலே வந்துடறேன் அப்படின்னு சொல்லிப்போய்......

அத எதுக்காவடி இப்ப நியாபகபடுத்தறே !! அதான் முடிஞ்சு போச்சே...

முடிஞ்சு போச்சு. ஆனால் மூக்கை உடைச்சுண்டு அல்லவா வந்தீங்க..

நான் என் மூக்கை தொட்டுப்பார்த்தேன்.  இருக்கவேண்டிய இடத்தில் தான் இருந்தது.  அன்னிக்கு, லேசா தலைலே விழுந்த தட்டுலே கொஞ்ச நிலை குலைஞ்சு போனது வாஸ்தவம் தான். ஆனா,  அன்னிக்கே அத காம்பன்சேட் பண்ற மாதிரி ஒரு ப்ரைஸ் கிடைச்சதே அத மறக்கலாமா? மறக்கத்தான் முடியுமா என்று என்னை ஆசுவாசப்படுத்தினேன்.

அது கிடக்கட்டும். இன்னிக்கு என்னாச்சு ?  கண்ணோடு கண் இணைத்தாள் என் காரிகை.

ஒன்னும் பெரிசா இல்ல. ஒரு சிம் கார்டு வாங்கலாம் அப்படின்னு ரோடுக்குப்போனேனா ....

சரி.

அவன் உங்களுக்குத் தேவையான வோடாபோன் கார்டு தாரேன். என்று சொல்லும்போதே இடைமறித்தாள்.

அது என்ன ஓடா  போன் ? மத்ததெல்லாம் பி.எஸ்.என்.எல். , ஏர் டெல் எல்லாம் ஓடிப் போயிடுச்சா ?

அது பேருடி அந்த செல்லு கம்பெனிக்கி. விசயத்த கேளு.

சொல்லுங்க..

அங்கன போயி, ஒரு செல்லு புதுசா கொடு அப்படின்னா ரேசன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ் போர்ட்டு , பான் கார்டு எல்லாத்துக்கும் ஜெராக்ஸ் கொடுத்தேன். இருந்தாலும் ஒரு போடோ வேணும் அப்படின்னு சொன்னான்.

நியாயம் தானே...புத்சா எதேனும் வருதுனா, போட்டாவாச்சும் பாக்கணும் கொடுக்கணும் இல்லையா..?

சரிதான். எங்கட்ட இல்ல. கொண்டு போக மறந்துட்டேன். இதான் என்னோட செல் போன் போட்டோ லே இருந்துச்சு.  இத காம்பிச்சா ....

இன்னா பெரிசு, விளையாடுறியா ? அப்படின்னு சொல்றான்.

யோவ்..இது என் மூஞ்சி தான்யா...அந்த மைலாபூர் ஈ. என்.டி. லே மூக்கு ஒழுவறது அப்படின்னு சொன்னதுக்கு எக்ஸ் ரே எடுன்னு ரூபா 400 கொடுத்து எடுத்த போடோ அப்படின்னேன்.

அவன் சிரிக்கிறான். பெரிசு..நீங்க ரோடை கிராஸ் பண்ணினா ஒரு ஸ்டூடியோ இருக்கு. அங்கன பத்தே நிமிசத்திலே போடோ எடுத்து தந்துடுவாங்கா. ஒரு எட்டு காபி கிடைக்கும். எண்பது ரூபாய்லே . ஒன்னு கொண்டாங்க. அதுக்குள்ளே உங்க சிம்மை ரெடி பண்ணி வைக்கிறேன் என்றான்.

அப்பறம்..

நான் ரோடை  கிராஸ் பண்ணினேனா ...

அந்த லாமேக் ஸ்கூல் இடத்துலே ரோடை கிராஸ் செய்யாதீங்க அப்படின்னு எத்தனை தரம் உங்களுக்கு புத்தி சொல்றது ?

அது சரிதான். நானும் மூணு தரம் ஹிந்துவுக்கு லெட்டர்ஸ் டு த எடிடர் எழுதிட்டேன். இரண்டு தரம் போலிஸ் கமிஷனருக்கும் பேசிட்டேன். இன்னமும் ஒரு பெடஸ்ரியன் கிராசிங் போட மாட்டேன் அப்படிங்கராக..

இன்னாச்சு அதச் சொல்லுங்க...

இன்னிக்கு ரோடை கிராஸ் பண்ணும்போது கவனிச்சேன். ஒரு பெரிய துணி லே ஒரு நோட்டிஸ் எழுதி இருந்தது.

CHENNAI TRAFFIC POLICE. 

ZEEBROS CROSSING FOR PEDASTRIANS ONLY.

RESPECT PEDASTRIANS !!

STOP BEFORE STOP-LINE. 

ஆமா... எல்லா கிராசிங் லேயும் அத பார்த்தேன்.

நான் சும்மா பார்த்துட்டு போய் இருக்கலாம்.

அதான் எப்பவுமே கிடையாதே !!

அந்த பெடச்டிரியன் கிராசிங் எங்கேன்னு பார்க்கலாம் அப்படின்னு குனிஞ்சு அந்த ரோடு புல்லாவும் தேடினேன்..

அப்படியா...

அங்கன ஒரு போலீஸ் காரரு வேறு என்னைக் கேட்டாரு. " என்ன பெரிசு ! குனிஞ்சுகிட்டு எதைத் தேடற ! எதுனாச்சும் கெட்டு ப்போக்கிட்டியா ? " அப்படின்னு.  நான் விசயத்த சொன்ன உடனே...

ஒரே முறைப்புலே குச்சியை எடுத்துட்டாரு... ஊட்டுக்கு ஓடு பெரிசு..இல்ல எதுனாச்சும் வண்டிலே அடிபட்டே காலி ஆயிடுவே அப்படின்னு சத்தம் போட்டாரு.

நானும் சரி, நமக்கெத்துக்கு வம்பு, நம்ம என்ன டிராபிக் ராமசாமி ஆ, !! எப்ப அந்த நடைபாதை போடராங்களோ போடட்டும் அப்படின்னு, திரும்பினேன் பாரு.....

அதுக்குள்ளே ஒரு பையன் தன பைக் வந்து இடிச்சுட்டான்.

அப்பாடி...இன்னா வலி வலிக்குது...

அப்படியே மல்லாக்க படுத்துக்கங்க. வெந்நீர் ஒத்தடம் கொடுக்கறேன். அப்படியே அயோடெக்ஸ் தடவிக்கிட்டு படுங்க. என்கிறாள் கிழவி.



அதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கு 48 ம்வருட  ஹாப்பி வெட்டிங் டே  இல்லையா.
இந்தா உனக்கு ஒரு ரோசாப்பூ..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக